வயது இருபத்துஒன்று.
கல்லூரி இறுதியாண்டு மாணவி.
பரீட்சை நேரம்.
சில நாளாக வயிற்று வலி.
பசியே இல்லை.
சாப்பிட்டால் உள்ளே இறங்குவதில்லை.
ஜெலுசில் குடித்தாலும் வலி குறையவில்லை.
பரீட்சை முடிந்து மருத்துவரிடம் ஆலோசனை.
அல்சராகத்தான் இருக்கும்.
வேணும்னா ஒரு என்டோஸ்கோபி பண்ணலாம்.
பண்ணியாச்சு.
சின்ன பிரச்சனை.
ஒரு சிடி ஸ்கான் பண்ணி பாத்துறலாமே.
பண்ணலாம்.
இரைக் குழாயும் இரைப்பையும் சேரும் இடத்தில் புற்றுநோய்.
நேரிக்கட்டிகளுக்கும் கல்லீரலுக்கும் பரவியிருக்கிறது.
பெற்றோரிடம் எப்படிச் சொல்லுவது?
சொல்லித்தான் ஆகவேண்டும்.
சொல்லியாயிற்று.
என்ன செய்யலாம்.
ஒன்னும் செய்ய முடியாது.
குணப் படுத்த வாய்ப்பேயில்லை.
மீறிப் போனால் மூன்று அல்லது நான்கு மாதம்.
சாகப் போகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாட்கள் நரகமாகிவிடும்.

Comment by Senthil Nathan (@4SN) — நவம்பர் 4, 2011 @ 12:05 மு.பகல் |
This was the same thing my mother died of.
Comment by LG — நவம்பர் 6, 2011 @ 10:47 மு.பகல் |